திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி கிராமத்தில் சிவனடியார் ஆன்மீக குழு சார்பில் சிவாலயத்தில் பிரதி மாதம் பிரதோஷ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக பிரதி வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவாலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும் , அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் மார்கழிமாத பிறப்பையொட்டி சிவனடியார் குழு சார்பில் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு வீதியாக சிவ நாம கீர்த்தனைகளைப் பாடி கொண்டு வருவது சிறப்பு ஆகும்..
ஆம்பூர் அருகே மார்கழி மாத சிறப்பு ஆன்மீக நிகழ்வு..