ஜார்க்கண்ட் :-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 30-ந்தேதி முதல் தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்த நிலையில் ஓட்டுப்பதிவு பல இடங்களிலும் அமைதியாகவே ந்டைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஆட்சியமைக்க 42 இடங்கள் என்ற நிலையில் தற்போது.காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முன்னிலை பெற்றது.ஆளும் பாஜக கூட்டணி பின்னடைவை அடைந்துள்ளது.
தற்போது வரை காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 40 தொகுதிகளிலும்,பாஜக தொகுதிகளிலும் 28 முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 13 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணி ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.