இன்றைய இளைஞர்கள் பல்வேறு சாதனைகள் செய்து உலக அரங்கில் சிறந்து விளங்குகின்றனர். அதிலும் தமிழக இளைஞர்கள் இன்று பல்வேறு பல சாதனைக்கு சொந்தக்காரராக உருவாகி வருகின்றன அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சேர்ந்தவர் அருண் பிரபு இவர் ஒரு ஆட்டோவில் வீட்டை கட்டி அசத்தியுள்ளார். அந்த ஆட்டோவில் கழிவறை, சமையலறை, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதி, மின்விளக்கு, மின்விசிறி, துணி காயப்போட வசதி, தண்ணீர் சூடு செய்வதற்கான இடம், மேல்மாடி என அனைத்து சகல வசதிகளுடன் கூடிய ஆட்டோவை தயாரித்துள்ளார். இவை அனைத்தும் தயாரிக்க சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதைக் கட்டிமுடிக்க ஐந்து மாதங்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த இளைஞர் உண்மையாகவே விஞ்ஞானி தான் நாமும் பாராட்டுவோம்...
நாமக்கல் அருகே ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவை வீடாக மாற்றி இளைஞர் சாதனை.