கியூபா:-
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் கீழ் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் அவதிப்பட்டது கியூபா.பின்பு சே குவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ வின் போராட்டத்தினால் சுதந்திர போரில் வெற்றிபெற்று சுதந்திர நாடானது.
1959ஆம் ஆண்டு கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பதவியேற்றார். பின்பு கியூபாவின் அதிபராக 1976ல் பதவியேற்றார்.எனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
அவர் அதிபரான பிறகு கியூபாவில் பிரதமர் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.அனைத்து அதிகாரங்களும் அதிபருக்கே வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2008ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பிடல் காஸ்ட்ரோ மறைந்த பிறகு அவரது இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பொறுப்பை ஏற்றார். அவரும் தன்னுடைய 87 வயதில் அதிபர் பதவியிலிருந்து விலக துணை அதிபர் மிக்வெல் டயாஸ் அதிபரானார்.
இந்நிலையில் தற்போது கியூபாவின் பிரதமராக மானுவல் மார்ரீரோ க்ரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 1976 க்கு பின்னர் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு பின்பு கியூபாவின் பிரதமராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது அந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.