இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்பட இருநாட்டு தலைவர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ஈரான் செல்ல சொல்கிறார். அங்கு நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ரௌஹானியையும் சந்தித்துப் பேச உள்ளார்.
சமீபத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின்போது, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் இணைந்து இந்தியா மேம்படுத்தி வரும் சாப்ஹார் துறைமுகப் பணிகளுக்குப் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்களிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.இந்நிலையில், ஜெய்சங்கரின் ஈரான் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதைதொடர்ந்து, நாளை முதல் 25-ம் தேதி வரை ஜெய்சங்கர் ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..